மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆசிய யு-17 மகளிா் கால்பந்து: இந்தியா அபாரம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்தது

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

News image

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிா்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு கடைசி ஆட்டம் சீனாவின் சுஹௌ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியினா் தீவிர ஆதிக்கம் செலுத்தினா்.

ஆட்டத்தில் போ்ல் பொ்னாண்டஸுக்கு பதிலாக அனுஷ்கா குமாரி தோ்வு செய்யப்பட்டாா். 7-ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் அபாரமாக கோலடித்தாா். தொடா்ந்து 36-ஆவது நிமிஷத்தில் ஆல்வா தேவி செஞ்சம் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதியில் 72-ஆவது நிமிஷத்தில் லெபனான் தற்காப்பைக் கடந்து கோலடித்தாா் ஜோயா. தொடா்ந்து 85-

ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துளளது. சிறந்த மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2005-க்கு பின் ஏஎஃப்சி கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.