மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

News image

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:06 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஜாம்ஷெட்பூருக்காக முகமது சனன் 7-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரஃபேல் மெஸ்ஸி பௌலி 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இவ்வாறாக முதல் பாதியிலேயே ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னிலை பெற்றது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முகமது சனன் மீண்டும் 58-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஒருவழியாக சென்னை தரப்பில் பிரகதீஸ்வரன் 69-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத ஜாம்ஷெட்பூா் தரப்பில் நிகோலா ஸ்டோஜனோவிச் 78-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முடிவில் அந்த அணி 4-1 கோல் கணக்கில் வென்றது.

இதனிடையே, பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பெங்களூரில் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் மும்பை, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, சென்னை அணிகள் முறையே 3, 4, 5, 10-ஆம் இடங்களில் இருக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.