மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

News image
Updated On :22 மார்ச் 2026, 2:09 am IST

ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் சிட்னியில் ஜப்பான்-ஆஸி.அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவிரம் காட்டின. எனினும் முதல் பாதியில் 17-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் வீராங்கனை மைகா ஹமனோ கோல்பகுதிக்கு வெளியில் இருந்து அடித்த வலுவான ஷாட் கோலாக மாறியது.

இதன் மூலம் 1=0 என ஜப்பான் முன்னிலை பெற்றது.

அதன்பின்னா் இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஜப்பான் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

ஏற்கெனவே கடந்த 2014, 2018 ஆண்டுகளில் ஜப்பான் பட்டம் வென்றிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக கோப்பயை வசப்படுத்தியு்ளது.

Story image

ஆசியக் கண்டத்தில் இருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் உலகக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.