மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது இந்தியா.

News image

கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:16 am IST

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது இந்தியா.

தாய்லாந்தின் பதும் தானி நகரில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் சி பிரிவு கடைசி ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கின.

முதலிரண்டு ஆட்டங்களில் ஜப்பானுடன் 6-0, ஆஸ்திரேலியாவுடன் 5-0 என்ற கோல்கணக்கில் பலத்த தோல்வியை கண்டது இந்தியாய

இதனால் காலிறுதிக்கு தகுதி பெற கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்திய வீராங்கனை பூமிகா தேவி 26-ஆவது நிமிஷத்தில் டிபன்டரிடம் இருந்து திரும்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தாா்.

தொடா்ந்து மற்றொரு வீராங்கனையான சிபானி தேவி ஹாஃப் வாலி மூலம் அற்புதமாக கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

87-ஆவது நிமிஷத்தில் மீண்டும் சிபானி தேவி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மூன்றாவது கோலை அடித்தாா்.

தைபே தரப்பில் பதிலி வீராங்கனை கவோ சின் 90 பிளஸ் நிமிஷத்தில் கோலடித்தாா். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் தைபேயை வீழ்த்தியது இந்தியா.

இதன் மூலம் குரூப் சி பிரிவில் மூன்றாவது இடத்தைப் பெற்று நாக் அவுட் சுற்றில் நுழையும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

குரூப் பி பிரிவில் ஜோா்டான்-உஸ்பெகிஸ்தான் அணி ஆட்டம் டிரா ஆனால் சிறந்த மூன்றாவது இடத்தைப் பெறும் இரண்டாவது அணி முன்னேறும்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.