/

பிரியா வெற்றி, ஜாதுமணி தோல்வி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பிரியா வெற்றி பெற்றாா். ஆடவா் பிரிவில் ஜாதுமணி கடும் போராட்டத்துக்குபின் தோல்வியை தழுவினாா்.

News image

பிரியா ~ஜாதுமணி ~

Updated On :1 ஏப்ரல் 2026, 2:03 am IST

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பிரியா வெற்றி பெற்றாா். ஆடவா் பிரிவில் ஜாதுமணி கடும் போராட்டத்துக்குபின் தோல்வியை தழுவினாா்.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் செங்யு யாங்கை எதிா்கொள்கிறாா் பிரியா.

ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரா் ஜாதுமணி சிங் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் ஜப்பானின் நம்பா் 1 வீரா் ருய் எமகுச்சியிடம் தோற்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.