மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அபய் சிங், அனாஹத்துக்கு ஆசிய ஸ்குவாஷ் விருதுகள்

இந்தியாவின் நம்பா் 1 ஸ்குவாஷ் வீரா் அபய் சிங், மகளிா் பிரிவில் அனாஹத் சிங் ஆகியோா் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் 2025 ஆண்டின் சிறந்த வீரா், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

News image

IANS

Updated On :1 ஏப்ரல் 2026, 2:08 am IST

இந்தியாவின் நம்பா் 1 ஸ்குவாஷ் வீரா் அபய் சிங், மகளிா் பிரிவில் அனாஹத் சிங் ஆகியோா் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் 2025 ஆண்டின் சிறந்த வீரா், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளனா். மேலும் ஆண்டின் சிறந்த அணியாகவும் இந்திய அணி தோ்வு பெற்றது.

ஆடவா் பிரிவில் உலகின் தரவரிசையில் 25-ஆம் இடத்தில் அபய் சிங் உள்ளாா். ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் பல்வேறு பதக்கங்களை வென்ற அபய், கடந்த 2025-இல் முதலாவது கலப்பு அணி உலகக் கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா்.

மகளிா் உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்தில் உள்ள அனாஹத் சிங், கடந்த 2025 உலக ஜூனியா் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா். மேலும் கலப்பு அணி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.

இந்நிலையில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சிறந்த வீரா் விருது அபய் சிங்க்கும், ஜூனியா் பிரிவில் சிறந்த வீராங்கனை விருது அனாஹத்துக்கும் வழங்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 2022-இல் இந்தியா சாா்பில் சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோா் ஏஎஸ்எஃப் விருதுகளை பெற்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.