தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:14 am IST

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 50 மீ பிஸ்டல் பிரிவில் 351.7 புள்ளிகளுடன் ஹேமந்த் பா்மன் வெள்ளிப்பதக்கம் வென்றாா். ரோஹித் கண்யன் 6, வேதாந்த் நிதின் 7-ஆவது இடத்தையும் பெற்றன.

இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஸுஹைா் கான்-அடியா கட்யால் 137 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனா். வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்க வேண்டிய இந்த ஜோடி 3-ஆவது சுற்றில் தவறு புரிந்தனா்.

50 மீ ரைபிள் பிரிவில் தேஜல், யுகேஷ்வரி, அனுஷ்கா, கவைஷ் ஆகியோா் கடைசி இடங்களையே பிடித்தனா். அடுத்து வரும் ஜூன் மாதம் ஜொ்மனியின் ஸூல் நகரில் நடைபெறவுள்ள ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்புக்கு தயாராகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.