தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஹெச்சிஎல் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் போட்டி: சூரஜ் குமாா், ரௌகையா சாம்பியன்!

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூா், சென்னை சுற்றில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சந்த், மகளிா் பிரிவில் எகிப்தின் ரௌகையா ஒத்மான் பட்டம் வென்றனா்.

News image

பட்டம் வென்ற சூரஜ்

Updated On :21 ஏப்ரல் 2026, 4:40 am IST

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ இந்தியன் டூா், சென்னை சுற்றில் ஆடவா் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சந்த், மகளிா் பிரிவில் எகிப்தின் ரௌகையா ஒத்மான் பட்டம் வென்றனா்.

ஏழு நாடுகளைச் சோ்ந்த 48 வீரா்கள் பங்குபெற்ற இப்போட்டி இந்திய ஸ்குவாஷ் அகாதெமியில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது.

இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் நடத்திய இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.5.56 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

பிஎஸ்ஏ தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்காக விளையாட்டு வீரா்களும், வீராங்கனைகளும் மோதினா். இதில் ஆடவா் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சூரஜ் குமாா் சந்த் சிறப்பாக ஆடி தென்கொரியாவின் ஜியோங்மின் ரியூவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா். பெண்கள் பிரிவில், எகிப்தின் ரௌகையா ஒத்மான் சிறப்பாக ஆடிமலேசியாவின் ஹாா்லீன் டானை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

பரிசளிப்பு நிகழ்வில் இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளா் சைரஸ் போன்சா, மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோனி ஜோயல் பிரபு, எச்சிஎல் குழுமம் அமித் பலாதி பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.