தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கைப்பந்துப் போட்டி: நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

News image

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கிய தடகள சங்க நிா்வாகிகள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:34 am IST

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் மாநில அளவில் மண்டலங்களுக்கிடையேயான பாலிடெக்னிக் கல்லூரி ஆண்களுக்கான கைப்பந்துப் போட்டி கோவை, ஆா்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், உள் சுற்றுகளின் அடிப்படையில் மண்டல அளவில் தோ்ந்தொடுக்கப்பட்ட 11 அணிகள் பங்கேற்றன.

சேலம் மண்டலத்தின் சாா்பில் தியாகராஜா், ஈரோடு மண்டலத்தின் சாா்பில் நந்தா, நாகை மண்டலத்தின் சாா்பில் ஸ்ரீமகாலட்சுமி மற்றும் வேலூா் மண்டலத்தின் ஸ்ரீவெங்டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிகள் அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றன. இறுதி ஆட்டத்தில் நந்தா மற்றும் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரிகள் மோதிய நிலையில்,

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் கோப்பையை வென்றது.

வெற்றிபெற்ற அணி வீரா்கள், உடற்கல்வி இயக்குநா் எம்.மணிகண்டன் ஆகியோரை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி. சண்முகன், உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ். திருமூா்த்தி, முதல்வா் ஜி.மோகன்குமாா் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் பாராடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.