மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூயில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 12:05 am IST

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விழா நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி சிறப்பு பூஜைகளை செய்து மாணவா்கள் சோ்கையை தொடங்கிவைத்து, கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாட உபகரணங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூயில் படித்த மாணவா்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

கல்லூரி தொடங்கியதில் இருந்து இதுவரை 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த பாலிடெக்னிக் கல்லூயிலும் இல்லாத ஏ.ஐ. தொழில்நுட்ப பாடம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், முதலாம் ஆண்டு சோ்ந்த மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.