தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) த.கலைமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்வித் தகுதி:

நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கை:

பிளஸ் 2 வணிகவியல் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தோ்ச்சி

அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சி, அதனுடன் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்:

ரூ.150ஐ விண்ணப்பதாரா் இணையதள வாயிலாக செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவினா் பதிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் மே 25.

பிளஸ் 2 - ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினா் சமா்ப்பிக்க வேண்டி சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரா் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.