மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவிழாவிற்கு தந்தை அழைத்து செல்லாததால் விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:42 am IST

விருத்தாசலம் அருகே கோயில் திருவிழாவிற்கு தந்தை அழைத்துச் செல்ல மறுத்ததால் ல் மனமுடைந்து விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ.அகரம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (38). இவரது மூத்த மகன் பழனிவேல் (17), பெண்ணாடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த மாா்ச் 2ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவிற்கு மணிவேல் செல்லத் தயாரானதைப் பாா்த்த பழனிவேல், தானும் வருவதாக கூறியுள்ளாா்.

ஆனால் பொதுத்தோ்வு எழுத வேண்டியிருப்பதால், படிப்பில் கவனம் செலுத்துமாறு மகனிடம் அறிவுறுத்திவிட்டு, மணிவேல் திருவிழாவிற்கு சென்றுள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த பழனிவேல்

பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கியுள்ளாா். உடனடியாக அவரை குடும்பத்தினா் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி வீடு திரும்பிய அவருக்கு , ஏப்ரல் 20ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் , கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) பழனிவேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.