இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன் பின், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கேப்டனாக என்னுடைய இந்த பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. என்னுடைய கேப்டன்சி பயணத்தில் கடந்த மூன்று மாதங்கள் மிகவும் கடினமானவை. கடந்த மூன்று மாதங்களில் நான் பல்வேறு சோதனைகளுக்கு ஆளானேன். இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட அனைவரும் இந்த காலக் கட்டத்தை கண்டிப்பாக கடந்து வந்திருப்பார்கள் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமுடன் இணைந்து இங்கிலாந்து அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எங்களுடைய அனைத்து உழைப்பையும் கொடுக்கப் போகிறோம். எங்களுடைய இந்த பயணத்தில் நிறைய தவறுகள் செய்துள்ளோம். அந்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். வெற்றியைக் காட்டிலும் தோல்வியிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Ben Stokes has said that the last three months of his journey as England captain have been very difficult.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா அதிரடியில் மிரட்டுவார்: அஸ்வின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


