”சூர்யவன்ஷியின் வயது வேண்டுமானால் 15 ஆக இருக்கலாம். ஆனால் அவரின் ஆட்டம் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் உள்ளது” என பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
நடப்பு சாம்பியன்ஸான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெள்ளிக்கிழமை (ஏப்.10) நடந்த ஐபிஎல் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்களைக் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 26 பந்துகளுக்கு 78 ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச்செல்ல காரணமாக இருந்தார்.
இதுகுறித்து, போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், “இது டி20 ஆட்டம். சூர்யவன்ஷி இளம் வயதுக்காரர். மேலும், அவர் மிகச் சிறப்பாகவும் பக்குவமாகவும் பேட்டிங் செய்கிறார். ஒரு 15 வயது சிறுவனால் இப்படி பேட் செய்ய முடிகிறது. அவருக்கு 25 வயதாக இருந்தாலும் சரி அல்லது 15 வயதாக இருந்தாலும் சரி இதுமாதிரியான அதிரடி ஆட்டம் டி20 போட்டியின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன்.
எங்களிடம் திட்டம் இருந்தது. நாங்கள் ஒரு கேட்சையும் தவறவிட்டோம். ஆனால், இது கிரிக்கெட்டில் நடப்பதுதான். ஆகையால், நாங்கள் செய்ய நினைத்ததை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனாலும், நாங்கள் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.
இருப்பினும், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம். வெளியே இருந்து பார்ப்பதைவிட திடலுக்குள்ளிருந்து பார்க்கும் போது ஆட்டம் மெதுவாக இருந்ததாக நான் உணர்கிறேன். மேலும், வைபவ் நல்ல ஷாட்களை அடித்தார். அதனால், வித்தியாசமாக எதுவும் செய்ய முடியாததை நாங்கள் உணர்ந்தோம்” எனத் தெரிவித்தார்.
Summary
Suryavanshi may be just 15 years old, but his game is remarkably clear and composed," stated Bhuvneshwar Kumar, a fast bowler for the Bengaluru team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய புவனேஷ்வர் குமார்!

தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்கே முக்கியம்: புவனேஷ்வர் குமார்

பர்பிள் கேப் வென்ற புவனேஷ்வர் குமார்..! ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


