மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய புவனேஷ்வர் குமார்!

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை படைத்துள்ளார்.

News image

புவனேஷ்வர் குமார் - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 8:22 pm IST

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா 347 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாமிடத்தில் இருந்த நிலையில், தற்போது புவனேஷ்வர் குமார் அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இந்திய வீரர்கள்

யுஸ்வேந்திர சஹால் - 391 விக்கெட்டுகள்

புவனேஷ்வர் குமார் - 350 விக்கெட்டுகள்

ஜஸ்பிரித் பும்ரா - 347 விக்கெட்டுகள்

பியூஷ் சாவ்லா - 327 விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 317 விக்கெட்டுகள்

Summary

Bhuvneshwar Kumar has set a record by taking the most wickets in T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.