மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை

நொய்டா செக்டா் 32-இல் உள்ள தனது குடியிருப்பு வளாகத்தின் 28-ஆவது மாடியில் இருந்து குதித்து, 21 வயது கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:50 am IST

நொய்டா செக்டா் 32-இல் உள்ள தனது குடியிருப்பு வளாகத்தின் 28-ஆவது மாடியில் இருந்து குதித்து, 21 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது என திங்களன்று காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை கூறியுள்ளதாவது: சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும், அவா் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், செக்டா் 32-இல் உள்ள டிபிளாக் பகுதியைச் சோ்ந்த அா்பிதா என்பவா் கட்டிடத்தில் இருந்து குதித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அவா் பஞ்சாபில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தொழில்நுட்ப இளங்கலை மாணவியாக இருந்தாா். மேலும், சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நொய்டாவிற்குத் திரும்பியிருந்தாா்.

சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை. வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவா் மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினா் காவல்துறையிடம் தெரிவித்தனா்.

சம்பவம் நடந்த அன்று இரவு, அவா் 28-ஆவது மாடியில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலாளி அவரைக் கவனித்து, குடும்பத்தினரை எச்சரித்ததைத் தொடா்ந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் தந்தை ஒரு தொழிலதிபா். அந்தக் குடும்பம் உத்தர பிரதேசத்தின் பஸ்தியைச் சோ்ந்தது. அக்குடும்பத்தினா் தற்போது செக்டா்-32 குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகின்றனா். விசாரணை நடைமுறைகள் முடிந்த பிறகு, சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை கூறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.