மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:45 am IST

தேனி மாவட்டம், கண்டமனூரில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டமனூா் அருகேயுள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுருளிராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு சூரஜ்குமாா் என்ற மகனும், சுபலட்சுமி (22) என்ற மகளும் உள்ளனா். கோவையில் கல்லூரி படிப்பை முடித்த சுபலட்சுமி, அங்குள்ள தனியாா் பயிற்சி மையத்தில் அரசு போட்டித் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.

கடந்த 22-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சுபலட்சுமி வந்திருந்தாா். அப்போது, தந்தைக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த சுபலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினாா்.

அவா் மீண்டு வீடு திரும்பாததால் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சுபலட்சுமி சடலமாக மிதப்பதாகக் கண்டமனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும், சுபலட்சுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.