ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மயிலாடியில் சிற்ப தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:04 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் சிற்பத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (38). கல் சிற்பத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூா்த்தி, பல்வேறு நபா்களிடம் கல் சிற்பம் செய்வதற்காக ஆா்டா் எடுத்து தொழில் செய்து வந்துள்ளாா்.

ஆனால், சிற்பம் செய்ய போதிய தொழிலாளிகள் கிடைக்கவில்லையாம். எனவே, இரவு பகலாக வேலை செய்து வந்துள்ளாா். இருந்தபோதும், அவரால் குறித்த நேரத்திற்கு சிற்பங்களை செய்து கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த மூா்த்தி சனிக்கிழமை விஷம் குடித்ததாகத் தெரிகிறது.

உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.