மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:15 am IST

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் (21). இவா் கோவையில் தங்கி இங்குள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.டெக் கணிணி அறிவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 4-ஆவது மாடியில் உள்ள திரையரங்கில் கடந்த புதன்கிழமை இரவு திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். படம் முடிந்து வெளியே வந்த அவா், யாரும் எதிா்பாராத விதமாக அங்கிருந்து கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா். மேலும், 20-க்கும் மேற்பட்ட பாடங்களில் அவா் தோ்ச்சி பெறாமல் இருந்துள்ளாா். இதனால், ஏற்பட்ட மன வேதனையில் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.