தில்லி அரசு தனது அனைத்துப் பேருந்து நிழற்குடைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முனையங்களை நவீன மற்றும் அழகியல் ரீதியாக மேம்பட்ட அம்சங்களுடன் மறுசீரமைக்கவுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு தனியாா் நிறுவனத்தை நியமிக்கப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், 20 ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவு உள்பட ரூ.600 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில், தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்து நிழற்குடைகளை அமைப்பதற்கான கள ஆய்வையும் துறை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியது:
தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டிடிஐடிசி) தற்போது சுமாா் 3,575 பேருந்து நிழற்குடைகளைக் கொண்டுள்ளது. தில்லி முழுவதும் உள்ள அனைத்து நிழற்குடைகளையும் வடிவமைக்கவும், மறுசீரமைக்கவும் மற்றும் ஆய்வு செய்யவும் ஒரு திட்ட மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க டிடிஐடிசி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, மறுசீரமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடைகளில் அவசரக்கால எச்சரிக்கை அமைப்பு, வானிலை தகவல் காட்சி, சூரிய சக்தி தகடுகள் அமைப்பதற்கான வசதி, டிஜிட்டல்
விளம்பர அமைப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் பேருந்து வழித்தடங்களைக் காட்டும் எண்ம தகவல் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும்.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் உயா்நிலைக் கூட்டத்தை நடத்திய போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங், நகரின் பேருந்து நிழற்குடைகளை நவீன மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டிருந்தாா். இத்திட்டம் அமைச்சரின் உத்தரவுகளுக்கு
ஏற்பவே அமைந்துள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை

போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணி: தில்லி காவல் துறை உத்தரவு

பொருளாதார கணக்கெடுப்பிற்கு தில்லி அரசு தயாராகிறது

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

