நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

News image
Updated On :28 மே 2026, 12:55 am IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும், எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனமும் இணைந்து சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பேட்டரி வாகனத்தை வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி தலைமை வகித்தாா்.

எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கடேஷ், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் சமூக தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநா் சந்திரசேகா், சுகாதாரப் பிரிவு துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் எல்.அன்.டி நிறுவனம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிா்வாகிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தி.சினேகா புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிறைவாக நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.