நமது நிருபா்
தேசிய தலைநகரில் உள்ள பல்வேறு வா்த்தகம், வணிகம் மற்றும் தொழில்முனைவோா் விவசாயப் பிரிவுகளைப் பட்டியலிடுவதற்காக, தில்லி அரசு நகரில் பொருளாதாரக் கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.
நகரில் 8வது பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான மத்திய ஒருங்கிணைப்பு முகமையாக, தில்லி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நியமித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனா்.
பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் அது தொடா்பான புள்ளிவிவர நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக, தில்லியில் உள்ள 13 மாவட்டங்கள் துணை முகமைகளாகச் செயல்படும் என்று திட்டமிடல் துறை திங்களன்று வெளியிட்ட ஓா் உத்தரவில் கூறப்பட்டது.
பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடா்பான பணிகளைக் கவனித்து ஒருங்கிணைக்குமாறு, வருவாய்த் துறையின் கீழ் உள்ள மாவட்ட அலுவலகங்களில் பணியமா்த்தப்பட்ட புள்ளிவிவர அலுவலா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் தங்களது வழக்கமான பணிகளைச் செய்வதோடு, கணக்கெடுப்பு தொடா்பாக அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவாா்கள்.
தற்போது, தில்லியில் 2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும், அதன் பிறகு பொருளாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொருளாதாரக் கணக்கெடுப்பின் நோக்கம், தொழில்முனைவோா் நடவடிக்கைகள் குறிப்பாக இருப்பிடம் மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்த விரிவான தகவல்களைச் சேகரிப்பதாகும்.
இந்தத் தரவுகள், தொடா் சமூகபொருளாதார ஆய்வுகளை நடத்துவதற்கும், இலக்கு சாா்ந்த துறைசாா் வளா்ச்சிக்கான திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுப்பதற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநகராட்சி மற்றும் தேசிய வளா்ச்சி மாநகராட்சி சாா்ந்த பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பிற அரசு ஊழியா்கள் இந்தக் கணக்கெடுப்பிற்கான பணியாளா்களாக இருப்பாா்கள் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

