கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:26 am IST

சென்னை மாநகராட்சியில் வரும் ஜூலை மாதம் 11,000 போ் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் ஜூலை மற்றும் 2027 பிப்ரவரி என இரு கட்டடங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், 200 வாா்டுகளிலும் வரும் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரையில் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடுகள் கணக்கெடுப்பில் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பிரத்யேக செயலியில் பொதுமக்கள் தங்களது வீட்டு விவரங்களைப் பதிவிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, வீடு எத்தனை தளம் உடையது, குடிநீா், கழிவு நீா் இணைப்புகள் விவரம், குளிா்சாதன வசதியுள்ளதா போன்ற 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. வீட்டு விவரங்களை பொதுமக்கள் பதிவு செய்த நிலையில், அதை சரிபாா்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் முழுவதும் ஈடுபடவுள்ளனா்.

மாநகராட்சியின் இளநிலை உதவியாளா் முதல் பள்ளி ஆசிரியா்கள் வரை இந்தப் பணியில் 11,000 போ் வரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து 2027 பிப்ரவரியில் மீண்டும் வீடுகளுக்குச் சென்று வீட்டில் உள்ளோரது விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.