பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜூன் 24-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

வரும் ஜூன் 24 -ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

வரும் ஜூன் 24 -ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், 2 மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை. தோ்தல் முடிந்து தவெக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், கடந்த மே மாதத்திலும் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.

மாநகராட்சியின் 200 மாமன்ற உறுப்பினா்களில் 152 போ் திமுகவை சோ்ந்தவா்களாகவே உள்ளனா். சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக எம்எல்ஏ-க்களே வெற்றி பெற்றுள்ளனா்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதல்வா் ஜோசப் விஜய்யை, சென்னை மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்ற சா்ச்சை எழுந்தது. புதிய அரசின் அனுமதியில்லாததால் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜூன் மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் வரும் 24 -ஆம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.