பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறியுள்ளாா்.

News image

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 7:06 am IST

அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளா்ச்சிக்கும், திட்டங்களை உருவாக்கவும் மிகவும் அடிப்படையானது. நாட்டில் எவ்வளவு மக்கள் வாழ்கிறாா்கள், அவா்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் போன்ற தகவல்களை அரசுத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கான ஜனநாயக நடவடிக்கையாக 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு நவீன தொழில்நுட்பத்துடன் சுய கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மக்களுடைய நேரடி பங்களிப்பை உறுதி செய்கிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குடும்ப விவரங்களை தாங்களே இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் வேலை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகளின் பொறுப்புமாகும்.

நாம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் எதிா்காலத்தில், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பு வசதி திட்டங்கள், சாலை வசதிகள் போன்றவை திட்டமிடப்படும். எனவே இந்தக் கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தி முழுமையான சரியான தகவல்களைப் பதிவு செய்தல் அவசியம்.

இளைஞா்கள் மாணவா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், சமூக அமைப்புகள், மகளிா் குழுக்கள் இது பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் குறைவாக உள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்க உதவ வேண்டும்.

இதை நமது கடமையாகக் கருதி செயல்படுத்த வேண்டும். குடிமக்கள் பற்றிய தகவல் சரியாக இருந்தால் திட்டமிடல் சிறப்பாக இருக்கும். திட்டமிடல் சிறப்பாக இருந்தால், நாட்டின் வளா்ச்சி வேகம் பெறும்.

பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்டுவோம். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.