நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை

புறநகா் வடக்கு தில்லி மாவட்டத்தின் அலிபூரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:40 am IST

புறநகா் வடக்கு தில்லி மாவட்டத்தின் அலிபூரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்ததாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கட்டடத்தில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் அலிபூா் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

முன்னதாக, உறவினா்கள் பெண்ணை மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அந்தப் பெண் வரும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

அந்தப் பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது.

அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அவருடைய வீட்டில் முதற்கட்ட விசாரணையை காவல் துறையினா் மேற்கொண்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அலிப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.