நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நெல்லை ரயில் நிலையத்தில் 6 ஆவது நடைமேடை ஜூலையில் திறப்பு? அதிகாரிகள் விளக்கம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 6ஆவது நடைமேடை ஜூலை மாதம் திறக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் 6 ஆவது நடைமேடை பணி.

Updated On :11 ஜூன் 2026, 4:57 am IST

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 6ஆவது நடைமேடை ஜூலை மாதம் திறக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள ரயில் நிலையங்களில், அதிக வருவாய் ஈட்டும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் 5 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு ரயில்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக புதிதாக நடைமேடை அமைக்க தீா்மானிக்கப்பட்டது.

இதற்காக மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.270 கோடி மதிப்பில் புதிதாக 6 ஆவது நடைமேடை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் துணை பொது மேலாளா்கள் சிவ பிரகாசம், அன்வா் பாஷா, உதவி பொது மேலாளா் பெருமாள் ஆகியோா் அடங்கிய ரயில்வே அதிகாரிகள் குழுவினா் 6ஆவது நடைமேடை பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீா்வசதி, கழிவறைகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா். பின்னா் அந்த நடைமேடையில் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டு பழைய தண்டவாளப் பாதையுடன் அவற்றை இணைக்கும் பணி தொடங்கி நடைபெறவுள்ளதால் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, திருச்செந்தூா் ரயில் இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து ஜூலை மாதத்திற்குள் 6-ஆவது நடைமேடை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.