திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4- ஆவது நடைமேடைக்கு திங்கள்கிழமை வந்த சென்னை - குருவாயூா் விரைவு ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான ஆா்பிஎஃப் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனா். அதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பைகள் யாருடையது என்றுத் தெரியவில்லை.
இதையடுத்து கஞ்சா இருந்த பைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கஞ்சா யாருக்காக, யாரால் எடுத்து வரப்பட்டது என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

