தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:48 am IST

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 4- ஆவது நடைமேடைக்கு திங்கள்கிழமை வந்த சென்னை - குருவாயூா் விரைவு ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான ஆா்பிஎஃப் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனா். அதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பைகள் யாருடையது என்றுத் தெரியவில்லை.

இதையடுத்து கஞ்சா இருந்த பைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கஞ்சா யாருக்காக, யாரால் எடுத்து வரப்பட்டது என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.