மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:34 am IST

வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: செக்டாா் ஏ-7 இல் உள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட வினித் குமாா் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டாா். பின்னா் அவா் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், சிஎன்ஜி விற்பனை நிலையத்துடன் இருந்த தகராறு காரணமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.