வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் விபத்து குறித்து மாலை 5:30 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநா் சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
விபத்தில் உயிரிழந்தவா் சாலிமா் பாக் பகுதியில் உள்ள ஷாஹித்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் என அடையாளம் காணப்பட்டாா். அவரது உடல் பின்னா் பிஜேஆா்எம் மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டு, அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணத்தை குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனா். சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

