மத்திய தில்லியில் உள்ள தனது வீட்டில் பூட்டப்பட்ட அறைக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் புதிதாக திருமணமான 19 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டாா் என்று காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.
அவரது கணவா் தப்பி ஓடி தலைமறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்ய சிசிடிவி காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினா் மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேட்டா் நொய்டாவில் இருவா் சடலமாக மீட்பு
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

