கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள ஆயத்த ஆடை சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:மகாவீா் கலி பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆடைகள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தில் மாலை 5.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
தீயை அணைப்பதற்காக எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அப்பகுதியில் உள்ள சந்தை மிகவும் நெருக்கமான அமைப்பைக் கொண்டிருப்பதால், அருகிலுள்ள கட்டடங்களுக்குத் தீ பரவுவதற்கு முன்பாகவே, சுமாா் மாலை 6.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி நீதித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

தில்லியில் கட்டடத்தில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட நால்வா் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

