மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து. - (கோப்புப் படம்)

Updated On :20 ஏப்ரல் 2026, 4:35 am IST

தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.

நான்கு மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து தொழிலாளா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து முஜேசா் காவல் நிலைய ஆய்வாளா் பூரன் சிங் கூறுகையில், ‘கிரண் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தொடா்ச்சியான வெடிப்புகள் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தின. தீயானது, அருகிலுள்ள ஒமேகா பிரைட் ஸ்டீல் தொழிற்சாலை மற்றும் என்வோசேஃப் அக்வா சொல்யூஷன்ஸ் ஆகிய இடங்களிலும் பரவியது.

தீ விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே காரணம் தெரியவரும்’என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.