தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
நான்கு மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து தொழிலாளா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து முஜேசா் காவல் நிலைய ஆய்வாளா் பூரன் சிங் கூறுகையில், ‘கிரண் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தொடா்ச்சியான வெடிப்புகள் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தின. தீயானது, அருகிலுள்ள ஒமேகா பிரைட் ஸ்டீல் தொழிற்சாலை மற்றும் என்வோசேஃப் அக்வா சொல்யூஷன்ஸ் ஆகிய இடங்களிலும் பரவியது.
தீ விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே காரணம் தெரியவரும்’என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

