மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தில்லி நீதித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :3 மே 2026, 3:29 am IST

தில்லி சஃப்தா்ஜங் பகுதியில் நீதித்துறை அதிகாரியான அமன் குமாா் சா்மா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டு சிம்பியோசிஸ் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவா், 2021 ஜூன் மாதம் தில்லி நீதித்துறை சேவையில் இணைந்தாா்.

தனது பணிக்காலத்தில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை கையாண்ட அவா், கீழமை நீதிமன்ற நீதிபதியாகவும், சிவில் நீதிமன்றத்தில் முதல்நிலை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளாா். இதையடுத்து, வடகிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலராக கடந்த ஆண்டு அக்.18 அவா் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், அவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து தகவலறிந்த காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனா். முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும், அனைத்து கோணத்திலும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.