/

புதிதாக முதுநிலை, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள் தொடங்குவதற்கான இணையதள விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் குறித்து...

News image

தேசிய மருத்துவ ஆணையம் - கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 10:40 pm IST

மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள் தொடங்குவதற்கான இணையதள விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஏப். 20 வரை நீட்டித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 2026–2027 கல்வியாண்டிற்கான எம்டி, எம்எஸ் போன்ற புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயா் சிறப்பு படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள முதுகலை மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏப். 20 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

Story image

கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசியச் சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையின் முதன்மைச் செயலாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பங்கள் இருத்தல் அவசியம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இணையவழி விண்ணப்ப வாயிலாகச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

NMC In view of the above, and in order to provide adequate time to stakeholders to submit applications in accordance with the amended regulatory framework, the last date for submission of applications is hereby extended up to 20.04.2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.