புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று(மார்ச் 23) கையொப்பமானது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். என்றாலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்து இறுதி முடிவை அறிவிக்க இந்த இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை. இரு கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்புகின்றன. ஆனால், தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில்தான் பிரச்னை நீடித்தது.
இதனால், இரண்டு கட்சிகளின் தலைமையும் தலையிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க உத்தரவிட்டன. இதனால், காங்கிரஸ் - திமுக இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவை கடந்தும் நீடித்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.
காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 தொகுதியில் போட்டியிட உள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் என். ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 14 தொகுதிகளும் என உடன்பாடு ஏற்பட்டது.
தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 2, லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 என்று தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இதில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டது. அதிமுகவும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Summary
The seat-sharing agreement between DMK and Congress in Puducherry was signed today (March 23).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?
திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


