ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

திமுக - தேமுதிக இடையே நாளை தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் எனத் தகவல்..

News image

திமுக கூட்டணியில் தேமுதிக - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 11:47 am IST

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் நாளை(மார்ச் 25) தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து கட்சிகளிடையே மும்முரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுடன் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் தேமுதிகவுடன் நாளை (மார்ச்25) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக மாநிலங்களவை எம்.பி. எல்.கே.சுதீஷ் உள்பட 5 பேர் கொண்ட குழுவை தேமுதிக அமைக்கவிருக்கிறது. இந்த குழு நாளை திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் நாளையே இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்து கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Will DMK and DMDK sign seat-sharing agreement tomorrow?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.