மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜப்பான் மொழியில் வெளியாகும் துரந்தர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜப்பானில் துரந்தர் படம் வெளியிடப்படவுள்ளது பற்றி...

News image

துரந்தர் போஸ்டர் - X | Jio Studios

Updated On :29 ஏப்ரல் 2026, 3:31 pm IST

இந்தியாவில் வசூல் சாதனை படைத்த துரந்தர் திரைப்படம் ஜப்பானில் அந்நாட்டு மொழியில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது.

தொடர்ந்து, கடந்த மார்ச் 19 ஆம் தேதி துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியான இப்படம், 6வது வாரத்தில் வெற்றிகரமாக வசூலித்து வருகிறது.

துரந்தர் திரைப்படத்தின் இரு பாகங்களின் மொத்த வசூல் ரூ. 3,000 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. இந்த சாதனையைப் படைக்கும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி ஜப்பானில் ஜப்பான் மொழியில் துரந்தர் முதல் பாகம் வெளியிடவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

துரந்தர் போஸ்டர்

துரந்தர் போஸ்டர் - X | Jio Studios

Summary

Dhurandhar to be Released in Japan! Official Announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.