ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் தமிழில் நாளை (மார்ச் 21) வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் நேற்று (மார்ச் 19) வெளியானது.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் நேற்றுமுன் தினம் (மார்ச் 18) அன்று வெளியிடப்பட்டன. அதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட வேற்று மொழிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் துரந்தர் படம் வெளியானது. முதல் நாளில் மட்டுமே ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்தப் படம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியாகி ரூ. 3 - 4 கோடி வரை வசூலித்துள்ளது
இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் காட்சிகள் ரத்தான நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பு சென்சார் செய்யப்பட்டு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் தமிழிலும் இந்தத் திரைப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Dhurandhar 2 tamil version releasing tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பான் மொழியில் வெளியாகும் துரந்தர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!
பாகிஸ்தானின் விதியை எழுதும் இந்தியா? துரந்தர் ரிவென்ஞ் - திரை விமர்சனம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
