மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழுக்கு வருவாரா சாரா அர்ஜுன்?

நடிகை சாரா அர்ஜுன் குறித்து...

News image

சாரா அர்ஜுன்

Updated On :25 மார்ச் 2026, 12:44 pm IST

நடிகை சாரா அர்ஜுன் துரந்தர் திரைப்படம் மூலம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளார்.

தெய்வத் திருமகள், சைவம் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலான கவனத்தைப் பெற்றவர் நடிகை சாரா அர்ஜுன். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த துரந்தர் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதில், நாயகன் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இதுவரை குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, நாயகியாக ஜொலிப்பாரா எனக் கேள்விகள் இருந்தன.

Story image

அதற்கு பதிலடியாக துரந்தர், துரந்தர் - 2 ஆகிய இரண்டு படங்களிலும் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கி புகழடைந்துள்ளார். இந்த வெற்றியால் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் சாரா ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

அதேநேரம், இனி சாரா அர்ஜுன் தமிழ்த் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.

இயக்குநர் ஏ.எல். விஜய்யின் வழிகாட்டல் மூலமே சாரா திரைப்படங்களைத் தேர்வு செய்வதாகவும் கூறப்படுகிறது!

Summary

Actress Sara Arjun has garnered huge attention with the film Duranthar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.