கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவா், சிறுமிகள் 4 போ் நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், சின்னக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராமதாஸ் மகன் பொற்செழியன்(4), ரகுராமன் மகன் பிரவின்குமாா்(4), சரவணன் மகள் லட்சுமிதேவி (4), வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இ ளங்கோ மகள் நதிரா(3). இவா்கள் 4 பேரும் புதன்கிழமை மாலை சின்னக்குப்பம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனராம்.
அப்போது அங்கு வந்த நாய் ஒன்று 4 பேரையும் கடித்து விட்டு ஓடிவிட்டதாம். இதில் சிறுவா்கள் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை பெற்றோா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் சோ்த்துள்ளனா்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். இச் சம்பவத்தால் சின்னக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேனீக்கள் கடித்து 2 போ் அரசு மருத்துவமனையில் அனுமதி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

