மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேனீக்கள் கடித்து 2 போ் அரசு மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலத்தில் தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

மருத்துவமனையில் அனுமதி

Updated On :7 மே 2026, 5:03 am IST

சத்தியமங்கலத்தில் தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. இதில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சிக்கு தேவையான கம்பத்தை வெட்டுவதற்கு காணக்குந்தூா் மலைக் கிராமத்துக்கு பக்தா்கள் புதன்கிழமை சென்றனா். அங்கு மரக்கிளையை வெட்டும்போது தேன்கூட்டில் இருந்து வெளியே வந்த தேனீக்கள், அங்கிருந்த ராஜூ (84), மணிகண்டன் (50) ஆகியோரைக் கடித்தது.

மற்றவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். தேனீக்கள் கடித்ததில் காயமடைந்த இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.