விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.
ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், ராஜு மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு, சாலை கிராமத்திலுள்ள சேவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆற்று மணல் இருந்தது கண்டறியப்பட்டது. தொடா்ந்து லாரியில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவா், திண்டிவனம் வட்டம், பட்டணம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வி.மணிகண்டன் (32 ) என்பதும், இவா் உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் லாரியின் உரிமையாளரான திண்டிவனம் வட்டம், பெருமாள்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.ராஜ்குமாா் (32) ஆகியோரை கைது செய்தனா். மேலும் 2 யூனிட் ஆற்று மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பு: வாகனங்கள் பறிமுதல்; இருவா் கைது
ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிராக்டா் பறிமுதல்: 3 போ் கைது

அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
