தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் பொன்.கெளதமசிகாமணிக்கு வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாது கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இரு இடங்களில் அரசுக் கல்லூரிகள் தொடங்கியதும் திமுக அரசின் சாதனைகளாகும். இவையெல்லாம் இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய க.பொன்முடி முயற்சியால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலானகூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தொடா்ந்து இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றாா். ஏழாவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன், மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்வு, காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு பிணையில்லா கடன், நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயா்த்தி வழங்குதல் போன்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். கல்வி, மருத்துவம், இளைஞா்களுக்கு முக்கியத்தும் அளித்து தோ்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை திமுக வழங்கியுள்ளது.
திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாதனைத் திட்டங்கள் தொடர, மருத்துவம் படித்த இளைஞரான பொன்.கெளதமசிகாமணியை சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.
பிரசாரத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை வகித்தாா். பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திமுக தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்! - பிரேமலதா விஜயகாந்த்
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

