தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

News image

பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:23 am IST

திமுக தோ்தல் அறிக்கை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சேலம் மேற்கு, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி, பனங்காடு, மெய்யனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றக்கிழமை இரவு தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ், திமுக வேட்பாளா் தருண் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாக்கடை வசதி, தெரு விளக்கு, குடிநீா் வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுவந்து படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். ஐந்து சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் திட்டம் அனைத்து பெண்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் வந்துசேர வேண்டும் என்றால், அனைவரும் வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.