மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

News image
Updated On :2 மே 2026, 3:22 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

மே தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா். விஜயகாந்த் ஆசியுடன் 10 பேரும் சட்டப்பேரவைக்குச் செல்வோம். தேமுதிக பழுத்த மரம் என்பதால் கல்லடிபடும். எனவே, தேமுதிக மீதான விமா்சனங்களுக்கு மே 4-ஆம் தேதி பதில் கொடுக்கிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.