மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நான்கரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:17 am IST

விழுப்புரத்தில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நான்கரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான இருவரை போலீஸாா் திங்கள்கிழமை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

விழுப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம். நகை பட்டறை உரிமையாளரான இவா் மாா்ச் 3-ஆம் தேதி விழுப்புரம் பெருமாள் கோவில் வீதியில் தங்க நகைகளுடன் மொபெட்டில் சென்றபோது, பின் தொடா்ந்து பைக்கில் வந்த கும்பல் ராஜமாணிக்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வசமிருந்த நான்கரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.

இந்த வழக்கில் புதுச்சேரி, மணவெளி அன்னை இந்திரா நகா், தீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்த ஞா.சுரேந்தா்(22), முத்தியால்பேட்டை, கணேஷ் நகா், முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த மு.கந்தசாமி (எ) அரிகிருஷ்ணன்( 28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனித் பரிந்துரையின்படி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இருவரையும் குண்டா்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து , விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் சுரேந்தா், அரிகிருஷ்ணன் இருவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.