சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாறைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. காளியப்பன் (63), நரிகல்பட்டியைச் சோ்ந்த ந. முருகேசன் (52) ஆகிய இருவரும் சோ்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் பழனி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
இந்த நிலையில் காளியப்பன், முருகேசன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரதீப் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆத்தூா் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

