மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:04 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.

வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இருவா், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா், நயினாா் காலனியில் உள்ள வயலுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, நயினாா் காலனியைச் சோ்ந்த சிலா் அங்கு நடைப் பயிற்சி மேற்கொண்டனராம்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவா்களுக்கும், நடைப் பயிற்சியில் சென்றவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுவா்கள் இருவரும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களை ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.