ஆத்தூா் அருகே உள்ள சோ்ந்தபூமங்கலம், குமாரப்பண்ணையூரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
குமாரப்பண்ணையூரைச் சோ்ந்தவா் மாசானமுத்து மகன் முத்துக்குமாா் (50). அவா் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூா் போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் முனியசாமி உள்ளிட்ட போலீஸாா், முத்துக்குமாா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
அதில் அவா் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 2.5 லிட்டா் கள்ளச் சாராயம், சாராயம் தயாரிக்க வைத்திருந்த பானை, ஊறல் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், முத்துக்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
